ஜெயகாந்தன் | |
|---|---|
| பிறப்பு | முருகேசன் ()ஏப்ரல் 24, கடலூர், தமிழ்நாடு |
| இறப்பு | ஏப்ரல் 8, () (அகவை80) சென்னை, தமிழ்நாடு |
| இறப்பிற்கான காரணம் | முதுமை |
| இருப்பிடம் | சென்னை, கலைஞர் கருணாநிதி நகர் |
| தேசியம் | இந்தியர் |
| பணி | எழுத்தாளர் |
| பெற்றோர் | தண்டபாணி, மகாலெட்சுமி |
| வாழ்க்கைத் துணை | ஞானம் |
| பிள்ளைகள் | ஜெயசிம்மன், காதம்பரி, தீபலெட்சுமி |
| விருதுகள் | ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, பத்ம பூஷண் |
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, - ஏப்ரல் 8, ) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.
ஜெயகாந்தன் ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் [1]. இவரது இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறித் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவரது இலக்கிய வாழ்க்கை களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.
ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள் மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்![2]
(கால முறைப்படி)
| வ.எண் | கதையின் பெயர் | வெளியான காலம் | இதழின்பெயர் | தொகுப்பின் பெயர் | வெளியீட்டாளர் பெயர் |
|---|---|---|---|---|---|
| 1 | ஆணும் பெண்ணும் | -/-/ | - | ஆணும் பெண்னும் | எட்டு பிரசுரம், |
| 2 | பட்டணத்து வீதியிலே | -/-/ | - | ,, | ,, |
| 3 | பேசும் புழுக்கள் | 15/9/ | பிரசண்ட விகடன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | - |
| 4 | காலம் தோற்றது | -/12/ | காவேரி | ,, | ,, |
| 5 | சாந்தி பூமி | - | - | உதயம் | விஜயா பிரசுரம், |
| 6 | சுமை பேதம் | - | - | உதயம் | ,, |
| 7 | கண்ணன் பிறந்தான் | - | - | உதயம் | ,, |
| 8 | உதயம் | - | - | ,, | ,, |
| 9 | பிழைப்பு | - | - | உதயம் | - |
| 10 | மீனாட்சி ராஜ்யம் | - | - | ,, | ,, |
| 11 | காந்தி ராஜ்யம் | - | - | ,, | ,, |
| 12 | சொக்குப்பொடி | 16/05/ | சமரன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
| 13 | சட்டம் வந்த நள்ளிரவில் | 23/05/ | சமரன் | உதயம் | விஜயா பிரசுரம், |
| 14 | மரணவாயில் | 30/05/ | சமரன் | ,, | ,, |
| 15 | சாந்தி சாகரம் | 13/06/ | சமரன் | ,, | ,, |
| 16 | எச்சரிக்கை | 20,27/06/ | சமரன் | ,, | ,, |
| 17 | தத்துவச் சொறி | 04/07/ | சமரன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
| 18 | இவர்களும் இருக்கிறார்கள் | 11,18/07/ | சமரன் | உதயம் | ,, |
| 19 | இலட்சியச் சிலுவை | -/-/ | சமரன் | ,, | ,, |
| 20 | யாசனம் | -/05/ | சரஸ்வதி | ,, | ,, |
| 21 | தேரைப்பழி | -/06/ | சரஸ்வதி | ,, | ,, |
| 22 | ஆலமரம் | - | மாலை மயக்கம் | மீனாட்சி புத்தக நிலையம் | |
| 23 | பித்துக்குளி | -/07/ | சரஸ்வதி | உண்மை சுடும் | ,, |
| 24 | பேதைப்பருவம் | -/08/ | சரஸ்வதி | தேவன் வருவாரா | ,, |
| 25 | தனிமனிதன் | -/-/ | - | ஒரு பிடி சோறு | ,, |
| 26 | பொறுக்கி | -/-/ | - | ,, | ,, |
| 27 | தமிழச்சி | -/-/ | - | ,, | ,, |
| 28 | சலிப்பு | -/03/ | சாந்தி | உண்மை சுடும் | ,, |
| 29 | வேலைகொடுத்தவன் | -/08/ | சரஸ்வதி | ஒரு பிடி சோறு | ,, |
| 30 | பூ வாங்கலியோ பூ | -/09/ | ,, | ,, | ,, |
| 31 | தீபம் | -/11/ | ,, | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
| 32 | தாம்பத்தியம் | -/2/ | சரஸ்வதி | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் |
| 33 | திரஸ்காரம் | -/3/ | ,, | புதிய வார்ப்புகள் | ,, |
| 34 | ரிக் ஷாகாரன் பாஷை | -/4/ | ,, | ஒரு பிடி சோறு | ,, |
| 35 | பெளருஷம் | -/5/ | ,, | சுமை தாங்கி | ,, |
| 36 | சினம் எனும் தீ | 6/6/ | ,, | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
| 37 | பால் பேதம் | -/8/ | ,, | இனிப்பும் கரிப்பும் | மீனாட்சி புத்தக நிலையம் |
| 38 | எது, எப்போது | -/09/ | ,, | ,, | ,, |
| 39 | ஒருபிடி சோறு | -/10/ | ,, | ,, | ,, |
| 40 | ராசா வந்துட்டாரு | -/11/ | சரஸ்வதி | ஒரு பிடி சோறு | ,, |
| 41 | ஒரு பிரமுகர் | -/12/ | ,, | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 42 | முச்சந்தி | -/01/ | ,, | தேவன் வருவாரா | ,, |
| 43 | தாலாட்டு | -/03/ | ,, | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 44 | டிரெடில் | -/04/ | ,, | ஒரு பிடி சோறு | மீனாட்சி புத்தக நிலையம் |
| 45 | சாளரம் | -/06/ | ,, | புதிய வார்ப்புகள் | ,, |
| 46 | கண்ணம்மா | -/08/ | ,, | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
| 47 | நந்தவனத்தில் ஒரு ஆண்டி | -/09/ | ,, | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 48 | பிணக்கு | -/10/ | ,, | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 49 | போர்வை | -/12/ | ,, | புதிய வார்ப்புகள் | ,, |
| 50 | யந்திரம் | -/12/ | தாமரை | தேவன் வருவாரா | ,, |
| 51 | பட்டணம் சிரிக்கிறது | -/-/ | - | ஒருபிடி சோறு | ,, |
| 52 | அபாயம் | -/-/ | - | புதிய வார்ப்புகள் | ,, |
| 53 | ஓவர்டைம் | -/02/ | ஆனந்த விகடன் | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 54 | பற்றுகோல் | -/03/ | சரஸ்வதி | ,, | ,, |
| 55 | தர்க்கம் | -/04/ | சரஸ்வதி | ,, | ,, |
| 56 | செக்சன் நம்பர் 54 | -/07/ | கல்கி | சுமைதாங்கி | மீனாட்சி புத்தக நிலையம், |
| 57 | புகைச்சல் | -/07/ | ஆனந்த விகடன் | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 58 | இனிப்பும் கரிப்பும் | -/07/ | கங்கை | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 59 | நிந்தாஸ்துதி | -/09/ | கல்கி | இனிப்பும் கரிப்பும் | ,, |
| 60 | போன வருசம் பொங்கலப்போ | -/10/ | கல்கி | சுமை தாங்கி | ,, |
| 61 | சர்வர் சீனு | -/10/ | கல்கி | சுமை தாங்கி | ,, |
| 62 | ராஜா | -/10/ | கல்கி | ,, | ,, |
| 63 | கேவலம் ஓரு நாய் | -/10/ | கல்கி | ,, | ,, |
| 64 | உண்ணாவிரதம் | -/11/ | - | மாலை மயக்கம் | ,, |
| 65 | துறவு | -/-/ | சரஸ்வதி | தேவன் வருவாரா | ,, |
| 66 | நீ இன்னா சார் சொல்றே | -/-/ | - | மாலை மயக்கம் | ,, |
| 67 | இரண்டு குழந்தைகள் | -/-/ | புதுமை | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம், |
| 68 | குறைப்பிறவி | -/-/ | ஆனந்த விகடன் | தேவன் வருவாரா | ,, |
| 69 | தேவன் வருவாரா | -/-/ | அமுத சுரபி | தேவன் வருவாரா | ,, |
| 70 | அன்புக்கு நன்றி | 14/01/ | தாமரை | உண்மை சுடும் | ,, |
| 71 | சுய ரூபம் | -/01/ | ஆனந்த விகடன் | மாலை மயக்கம் | ,, |
| 72 | வெளிச்சம் | 07/04/ | தாமரை | சுமைதாங்கி | ,, |
| 73 | துர்க்கை | 27/03/ | ஆனந்த விகடன் | ,, | ,, |
| 74 | சிலுவை | -/05/ | தாமரை | ,, | ,, |
| 75 | இதோ, ஒரு காதல் கதை | 08/05/ | ஆனந்த விகடன் | மாலை மயக்கம் | ,, |
| 76 | சீட்டாட்டம் | 17/07/ | ,, | ,, | ,, |
| 77 | புதிய கதை | -/-/ | தாமரை | புதிய வார்ப்புகள் | ,, |
| 78 | வாய்ச்சொற்கள் | 14/08/ | ஆனந்த விகடன் | மாலை மயக்கம் | ,, |
| 79 | இது என்ன பெரிய விஷயம் | 11/09/ | ,, | ,, | ,, |
| 80 | பொம்மை | 30/10/ | ஆனந்த விகடன் | தேவன் வருவாரா | ,, |
| 81 | தொத்தோ | -/-/ | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | தேவன் வருவாரா | மீனாட்சி புத்தக நிலையம் , |
| 82 | உடன்கட்டை | 11/12/ | ஆனந்த விகடன் | யுகசந்தி | ,, |
| 83 | பத்தினிப் பரம்பரை | -/12/ | தாமரை | உண்மை சுடும் | ,, |
| 84 | நிறங்கள் | -/-/ | அமுத சுரபி | தேவன் வருவாரா | ,, |
| 85 | உறங்குவது போலும் | -/-/ | - | மாலை மயக்கம் | ,, |
| 86 | மே | -/-/ | - | சுமை தாங்கி | ,, |
| 87 | மூக்கோணம் | 09/01/ | ஆனந்த விகடன் | எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை | |
| 88 | மூங்கில் | 26/05/ | ,, | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் , |
| 89 | கற்பு நிலை | 21/05/ | ,, | ,, | ,, |
| 90 | நான் இருக்கிறேன் | 30/07/ | ,, | ,, | ,, |
| 91 | என்னை நம்பாதே | -/-/ | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | உண்மை சுடும் | ,, |
| 92 | தர்க்கத்திற்கு அப்பால் | 5/11/ | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் , |
| 93 | லவ் பண்ணூங்கோ ஸார் | 17/12/ | ,, | ,, | ,, |
| 94 | சோற்றுச்சுமை | -/-/ | கல்கி | தேவன் வருவாரா | ,, |
| 95 | மாலை மயக்கம் | -/-/ | - | மாலை மயக்கம் | ,, |
| 96 | சுமைதாங்கி | -/-/ | - | சுமைதாங்கி | ,, |
| 97 | கருங்காலி | 3/2/ | ஆனந்த விகடன் | யுகசந்தி | ,, |
| 98 | அடல்ட்ஸ் ஒன்லி | -/4/ | ,, | ,, | ,, |
| 99 | மெளனம் ஒரு பாஷை | -/5/ | ,, | ,, | ,, |
| ஒரெ நண்பன் | 10/06/ | ,, | ,, | ,, | |
| பிம்பம் | -// | கல்கி | உண்மை சுடும் | ,, | |
| முன்நிலவும் பின்பனியும் | 26/08/ | ஆனந்த விகடன் | யுகசந்தி | ,, | |
| இல்லாதது எது | 07/10/ | ,, | ,, | ,, | |
| பூ உதிரும் | 16/12/ | ஆனந்த விகடன் | யுகசந்தி | மீனாட்சி புத்தக நிலையம் , | |
| கிழக்கும் மேற்கும் | 21/07/ | ,, | ,, | ,, | |
| தரக்குறைவு | 16/06/ | ,, | ,, | ,, | |
| யுகசந்தி | 21/07/ | ,, | ,, | ,, | |
| உண்மை சுடும் | 22/09/ | ,, | உண்மை சுடும் | ,, | |
| ஆளுகை | 00/00/ | ஆனந்த விகடன்(தீபாவளி மலர்) | ,, | ,, | |
| பொய் வெல்லும் | 10/11/ | ஆனந்த விகடன் | ,, | ,, | |
| சாத்தானும் வேதம் ஓதட்டும் | 29/12/ | ,, | ,, | ,, | |
| இருளைத் தேடி | 08/03/ | ,, | ,, | ,, | |
| ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் | 12/04/ | ,, | ,, | ,, | |
| எத்தனை கோணம் எத்தனை பார்வை | 21/06/ | ,, | புதிய வார்ப்புகள் | ,, | |
| ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் | 28/08/ | ,, | புதிய வார்ப்புகள் | மீனாட்சி புத்தக நிலையம் , | |
| விளக்கு எரிகிறது | 09/11/ | ,, | ,, | ,, | |
| புதிய வார்ப்புகள் | 14/03/ | ,, | ,, | ,, | |
| அந்தக் கோழைகள் | 16/05/ | ,, | சுயதரிசனம் | ,, | |
| சட்டை | 03/10/ | ,, | ,, | ,, | |
| சுயதரிசனம் | 00/00/ | ,, | ,, | ,, | |
| முற்றுகை | 00/00/ | ,, | ,, | ,, | |
| இருளில் ஒரு துணை | 14/08/ | ,, | ,, | ,, | |
| லட்சாதிபதிகள் | 0/0/ | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | ,, | ,, | |
| அக்கினிப் பிரவேசம் | 20/11/ | ஆனந்த விகடன் | ,, | ,, | |
| பாவம் பக்தர்தானே! | 03/05/ | ,, | இறந்த காலங்கள் | ,, | |
| நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன் | 17/03/ | ,, | ,, | ,, | |
| அக்ரஹாரத்துப் பூனை | 09/11/ | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | இறந்த காலங்கள் | மீனாட்சி புத்தக நிலையம் , | |
| நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ | 19/01/ | ஆனந்த விகடன் | ,, | ,, | |
| ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது | 13/04/ | ,, | குரு பீடம் | ,, | |
| தவறுகள் குற்றங்களல்ல | 05/10/ | ,, | ,, | ,, | |
| டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும் | 07/11/ | ,, | ,, | ,, | |
| கண்ணாமூச்சி | 0/0/ | தினமணிக் கதிர் (திபாவளி மலர்) | இறந்த காலங்கள் | ,, | |
| அந்த உயிரின் மரணம் | 0/0/ | ,, | குரு பீடம் | ,, | |
| அந்தரங்கம் புனிதமானது | 0/0/ | ஆனந்த விகடன் | இறந்த காலங்கள் | ,, | |
| இறந்த காலங்கள் | 0/0/ | ,, | ,, | ,, | |
| விதியும் விபத்தும் | 0/0/ | ,, | குரு பீடம் | மீனாட்சி புத்தக நிலையம், | |
| எங்கோ, யாரோ, யாருக்காகவோ | 2,3/04/ | ஞானரதம் | ,, | ,, | |
| குரு பீடம் | 0/0/ | ,, | ,, | ,, | |
| நிக்கி | 0/0/ | ,, | ,, | ,, | |
| புதுச் செருப்பு கடிக்கும் | 02/05/ | ஆனந்த விகடன் | ,, | ,, | |
| சீசர் | 16/09/ | ,, | சக்கரம் நிற்பதில்லை | ,, | |
| அரைகுறைகள் | 0/0/ | ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) | ,, | ,, | |
| சக்கரம் நிற்பதில்லை | 15/11/ | தினமணி கதிர் | ,, | ,, | |
| இந்த இடத்திலிருந்து | 0/0/ | ஆனந்த விகடன் | ,, | ,, | |
| குருக்கள் ஆத்து பையன் | 0/0/ | ,, | தினமணி கதிர் | ,, |
ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்)பரணிடப்பட்டது at the வந்தவழி இயந்திரம்
ஜெயகாந்தன் இதழ்கள் சிலவற்றிற்கு ஆசிரியராக இருந்தார். அவை:
எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னோடிகள் விமர்சன வரிசையில், மண்ணும் மரபும் எனும் நூலில் ஜெயகாந்தனின் படைப்புலகை குறித்து விவாதித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளை அவரது தளத்தில் எழுதியுள்ளார்[6]. விமர்சகர் எம். வேதசகாயகுமார் தனது முனைவர் பட்ட ஆய்வை புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு எனும் நூலாக்கியுள்ளார். ல் முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் ஆய்வு செய்துள்ளார்[7]. ஜெயகாந்தன் இலக்கியத்தடம், ஜெயகாந்தன் ஒரு பார்வை ஆகிய நூல்களை முறையே ப.கிருஷ்ணசாமி, கே.எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ரவிசுப்பிரமணியன்எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன் என்ற பேரில் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். ஜெயகாந்தனின் மறைவிற்கு பிறகு அவர் பற்றி எழுத்தாளர்கள் ஆற்றிய உரைகளும் தொகுக்கப்பட்ட நூல்களும் முக்கியமானவை.
ஜெயகாந்தன் அன்று இரவு மணிக்கு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.[8]